Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வரும் 18ம் தேதி முதல் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வண்டிகளை அணைத்து வைக்கும் திட்டம்

அக்டோபர் 13, 2021 06:25

காற்று மாசை குறைக்க வரும் 18ம் தேதி முதல் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வண்டிகளை அணைத்து வைக்கும் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

 

வாரத்தில் ஒரு நாளாவது தங்களது வாகனங்களை பயன்படுத்தாமல், மெட்ரோ ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்த மக்கள் உறுதியேற்க வேண்டும்.

 

மேலும் காற்று மாசுபாடு தொடர்பான புகார்களை தெரிவிக்க க்ரீன் டெல்லி என்ற செயலி உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் மாசு தொடர்பான புகார்களை பொது மக்கள் பதிவு செய்யலாம் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

தலைப்புச்செய்திகள்